காதலியின் வருங்கால கணவர் வீட்டுக்கு தீ வைத்த முன்னாள் காதலர்..!

சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் சுகுமாரன்(30) என்பவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையில் சில நாட்களில் அவர்களின் காதல் முடிவு பெற்றதால் , இந்தப் பெண்ணுக்கு முஹமது சலேஹ் என்ற வேறோரு நபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இது பற்றி தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த சுகுமாரன் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளார். இந்த நிலையில் திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், அஸ்லி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முகமூடி அணிந்து சென்றார் முன்னாள் காதலன்.

13வது மாடியில் வசிக்கும் அஸ்லியின் வீட்டின் கதவினை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, கதவுக்கு தீ வைத்துள்ளார். உள்ளேயிருந்த அஸ்லி,  வெளியே தீ எரிவதை உணர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த முகமூடி அணிந்த உருவமானது சுரேந்திரன் சுகுமாரன் என்பது தெரியவந்துள்ளது. இது பற்றி வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் , சுகுமாரனுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

1newsnationuser5

Next Post

#சேலம்: கள்ளக்காதலனை கொலை செய்த கணவர் மற்றும் மகன்..!

Sun Dec 11 , 2022
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள கும்மிப்பாடியில் சின்னகவுண்டரின் மகன் சிவக்குமார்(40) என்பவர் படுகாயமடைந்த நிலையில், நேற்றைய முன்தினத்தில்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி ஏற்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்துள்ளார். இதனிடையில் நேற்று மாலை சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  விசாரணையை குறித்து காவல்துறையினர் கூறியதாவது சிவக்குமாருக்கும் மற்றும் அதேபகுதியில் வசிக்கும் மாணிக்கத்தின் மனைவி புஷ்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை பற்றி அறிந்த மாணிக்கம், சிவக்குமாரிடம் பலமுறை […]
Murder 1

You May Like