முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி…!!மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு!!

முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது அதிமுக பொருளாளராகவும் உள்ளார். சென்னையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயம் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் முதற்கட்ட பரிசோதனை மற்கொண்டு வருகின்றனர். எனவே தொண்டர்கள் மருத்துவமனை அருகே கூடியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கடந்த 2020ம் ஆண்டு வனத்துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது ஒரு முறை இதே போல நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதித்து பார்த்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். பினனர் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் குணம் பெற்று வீடு திரும்பினார்.

நேற்று நள்ளிரவு முதலே நெஞ்சு வலி இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் கட்ட சோதனையில் இருதயத்தில் அடைப்பு இருப்பதாகவும் அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கப்படவில்லை.

Next Post

குஜராத்தில் கலவரம் இல்லாத நிலைக்கு மோடிதான் காரணம்…!! அனுராக் தாகூர் புகழாரம் !!

Sat Nov 19 , 2022
குஜராத் இன்று கலவரம் இல்லாத ஒரு மாநிலமாக உள்ளது என்றால் அதற்கு காரணம் நரேந்திர மோடி தான் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பா.ஜ.க.விற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு அவர் பல்வேறு பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், குஜராத்தில் இன்று […]

You May Like