ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சக்கரவல்லூர் அடுத்துள்ள எசையனூர் கிராமம் இலுப்பை சாலையைச் சார்ந்தவர் ஈஸ்வரப்பன் இவருடைய மகன்கள் குணசீலன் (38), கோபிநாதன்(30) உள்ளிட்ட இருவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதில் இளையமகன் கோபிநாதனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த குமாரின் மகள் ரம்யா (24) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை இருந்ததன் காரணமாக, மனைவியை சந்திப்பதை கோபிநாதனும் கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே ரம்யா தன்னுடைய தாயின் வீட்டில் வசித்து வந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் தான் ரம்யா அவருடைய தாயார் சரஸ்வதி சகோதரர் கிஷோர் உள்ளிட்டோருடன் கடந்த 14ஆம் தேதி குணசீலன் வீட்டிற்கு வந்து உன்னால்தான் என்னுடைய கணவர் தன்னை சந்திக்க வருவதில்லை என்று தெரிவித்து தகராறு ஈடுபட்டுள்ளார். அப்போது கிஷோர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீது பூட்டுத் தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் பரிந்துரையின் படி அவரை நேற்று முன்தினம் அவருடைய குடும்பத்தார் வீட்டிற்கு அழைத்து வந்தனர் வீட்டுக்கு வந்த குணசீலனுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆகவே மறுபடியும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.
ஆனால் அங்கே அவர் நேற்று அதிகாலை திடீரென்று உயிரிழந்தார். இது தொடர்பாக ஆற்காடு கிராமிய காவல்துறையைச் சார்ந்தவர்கள் வழக்கு பதிவு செய்து ரம்யா மற்றும் சரஸ்வதி உள்ளிட்டோரை ஏற்கனவே கைது செய்தனர். அதோடு குணசீலன் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி தலைமறைவாக இருக்கின்ற கிஷோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.