மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…! மிஸ் பண்ணிடாதீங்க

money School students 2025

தேசிய கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-26 கல்வியாண்டில் தேசிய கல்வி உதவித் தொகைக்காக, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 2025 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் 2025 ஜூன் 2, முதல், விண்ணப்பிப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், முதலில் ஒரு முறை பதிவை நிறைவு செய்து அதன் பிறகு கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்த முழு விவரங்களை https://scholarships.gov.in/studentFAQs என்ற இணையப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம். பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தொடக்கக் கல்விக்கு பிறகு இடைநிற்றலை தவிர்ப்பதற்காக தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மூலம் இந்த தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

Vignesh

Next Post

"பாராசிட்டமால் பாதுகாப்பானது"!. ஆட்டிசம் பாதிக்கும் என்ற டிரம்ப் குற்றச்சாட்டுக்கு WHO விளக்கம்!.

Wed Sep 24 , 2025
இந்தியாவில் பாராசிட்டமால் என்று அழைக்கப்படும், குழந்தை பருவ தடுப்பூசி பயன்பாடு மற்றும் கர்ப்ப கால வலி நிவாரணி டைலெனால்(Tylenol) என்ற மருந்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல என்றும் ஆட்டிசத்துடன் தொடர்புடையதால் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம் என்று டிரம்ப் கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அதோடு, அந்த மருந்துகளை ஆட்டிசம் விகிதங்களுடன் தொடர்புபடுத்தி […]
Paracetamol Trump WHO

You May Like