மீண்டும் ஓர் வாய்ப்பு…! உங்களுக்கு அரசு வழங்கும் ரூ.2,000 பணம் வரவில்லையா…? உடனே இதை செய்து முடிக்க வேண்டும்…!

சேலம்‌ மாவட்டத்தில்‌ பிரதம மந்திரியின்‌ கிசான்‌ நிதி உதவி பெறும்‌ விவசாயிகள்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ செல்போன்‌ எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும்‌ 3 தவணையாக ரூ.2,000/- வீதம்‌ இந்த நிதி உதவி விவசாயிகளின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.

pm kissan

இந்த திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறும்‌ விவசாயிகள்‌ பி.எம்‌.கிசான்‌ இணையதளத்தில்‌ அல்லது செயலியில்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ இணைக்கப்பட்ட மொபைல்‌ எண்ணை இணைப்பது அவசியம்‌ என்று கூறப்பட்டுள்ளதால்‌ விவசாயிகள்‌ அவர்கள்‌ பகுதிக்கு அருகில்‌ உள்ள அஞ்சலகங்கள்‌, தபால்காரர்கள்‌ மற்றும்‌ கிராம அஞ்சல்‌ ஊழியர்களை அணுகி ஆதார்‌ எண்ணுடன்‌ மொபைல்‌ எண்ணை உடனடியாக இணைத்து பயன்பெற வேண்டும்‌. இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்‌.

இவ்வாறு ஆதார்‌ எண்ணுடன்‌ மொபைல்‌ எண்ணை இணைத்த பிறகு https/pmkisangov.inadharekycaspx என்ற இணையதளம்‌ அல்லது பி.எம்‌.கிசான்‌செயலியில்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ வரும்‌ OTP அங்கீகாரத்தைப்‌ பயன்படுத்தி ஆதார்‌ எண்ணுடன்‌ மொபைல்‌ எண்ணை இணைத்துக்‌ கொள்ளலாம்‌.

சேலம்‌ மாவட்டத்தில்‌ 53,633 தகுதியுள்ள பயனாளிகளுக்கு eKYC செய்யப்படாமல்‌ உள்ளதால்‌ கடந்த அக்டோபர்‌ மாதத்தில்‌ விடுவித்த 12வது தவணைத்‌ தொகை கிடைக்கப்பெறவில்லை. எனவே, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும்‌
தங்களுடைய ஆதார்‌ எண்ணுடன்‌ கைப்பேசி எண்ணை இணைத்து கைரேகையை பதிவு
செய்து இத்திட்டத்தின்‌ நிதியினை தொடர்ந்து பெறுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இதற்காக சேலம்‌ மாவட்ட வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறையுடன்‌ சேலம்‌ அஞ்சல்‌ கோட்டமும்‌ அதன்‌ கீழ்‌ செயல்படும்‌ இந்தியா போஸ்ட்‌ பேமெண்ட்‌ வங்கியும்‌(இணைந்து அவ்வப்போது கிராமங்களில்‌ நடத்தப்படும்‌ சிறப்பு முகாம்கள்‌ மற்றும்‌ அஞ்சல்‌ அலுவலகங்களையும்‌ பயன்படுத்திக்கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

#Alert: வரும் 10, 11 ஆகிய தேதிகளில்... இந்த மாவட்டத்தில் மட்டும்...! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு...!

Tue Nov 8 , 2022
தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை […]
இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like