#கரூர்: சித்தப்பா மற்றும் காதலர் செய்த கொடூரம்..16 வயது சிறுமியின் கதறல்..! 

கரூர் மாவட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீட்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, ​​10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 16 வயது சிறுமியை சதீஷ்குமார் அடையாளம் கண்டு விசாரணை நடத்தினார். 


விசாரணையில், சிறுமி தனது உறவினருடன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். சம்பவத்தன்று முதியவர் ஒருவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சித்தப்பா முதியவரை கண்டித்துள்ளார். பின்னர் சித்தப்பாவும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனிடையே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை காதலித்த வாலிபரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக அந்த வாலிபர் மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியசாமி, சிறுமியின் சித்தப்பா இடும்பன், சஞ்சீவ் ஆகியோரை கைது செய்தனர். மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1newsnationuser5

Next Post

திமுகவுக்கு பெரும் இழப்பு..!! முன்னாள் எம்பி மஸ்தான் திடீர் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

Thu Dec 22 , 2022
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் காலமானார். சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு மஸ்தான் தஸ்தகீர் உயிரிழந்தார். மறைந்த முன்னாள் எம்.பி. மஸ்தான் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் துணைத் தலைவராக இருந்தவர். கருணாநிதி, முன்னாள் முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் […]
திமுகவுக்கு பெரும் இழப்பு..!! முன்னாள் எம்பி மஸ்தான் திடீர் மரணம்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

You May Like