கரூர் மாவட்ட பகுதியில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீட்க குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 16 வயது சிறுமியை சதீஷ்குமார் அடையாளம் கண்டு விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிறுமி தனது உறவினருடன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். சம்பவத்தன்று முதியவர் ஒருவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சித்தப்பா முதியவரை கண்டித்துள்ளார். பின்னர் சித்தப்பாவும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனிடையே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை காதலித்த வாலிபரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக அந்த வாலிபர் மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியசாமி, சிறுமியின் சித்தப்பா இடும்பன், சஞ்சீவ் ஆகியோரை கைது செய்தனர். மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.