திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிற ராமராஜ் (31) என்பவருக்கு திருமணம் ஆகிய நிலையில் ஒன்றறை வயதில் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். நாள்தோறும் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவதையே வழக்கமாக கொண்டிருந்தார் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் இரவு தனது குழந்தையின் அருகில் படுத்து உறங்கியுள்ளார். இதன் பிறகு சற்று நேரத்தில் குழந்தை அழ தொடங்கியது . மகளின் சத்தம் கேட்டு தாய், எழுந்து வந்து பார்த்தபோது தனது கணவர் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறிந்துள்ளார்.
இதனை தொடர்ந்து குழந்தையை உடனே அவரிடமிருந்து மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் , குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தக்காயமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
இது பற்றி அரசு மருத்துவமனையிலிருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது . மேலும் இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தையின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை செய்து, தந்தை மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.