#திருச்சி: ஒன்றறை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை..!

திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிற ராமராஜ் (31) என்பவருக்கு திருமணம் ஆகிய நிலையில் ஒன்றறை வயதில் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். நாள்தோறும் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவதையே வழக்கமாக கொண்டிருந்தார் என சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் இரவு தனது குழந்தையின் அருகில் படுத்து உறங்கியுள்ளார். இதன் பிறகு சற்று நேரத்தில் குழந்தை அழ தொடங்கியது . மகளின் சத்தம் கேட்டு தாய், எழுந்து வந்து பார்த்தபோது தனது கணவர் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறிந்துள்ளார்.

இதனை தொடர்ந்து குழந்தையை உடனே அவரிடமிருந்து மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் , குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தக்காயமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

இது பற்றி அரசு மருத்துவமனையிலிருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது . மேலும் இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தையின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை செய்து, தந்தை மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

கரையை கடக்கும் ’மாண்டஸ்’ புயல்..!! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

Thu Dec 8 , 2022
‘மாண்டஸ்’ புயல் கரையை கடக்கும் போது என்னென்ன செய்யக்கூடாது என்பதனை இந்தப் பதிவில் பார்க்கலாம். வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, மழை மட்டுமல்லாது, கரையை கடக்கும் பகுதிகளை ஒட்டி சூறாவளி காற்றும் வீச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் […]

You May Like