கர்நாடக மாநிலத்தில் உள்ள கெந்தட்டி கிராமத்தில் இருக்கும் ஒரு ஏரியில் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து நடத்திய விசாரணையில், ஐ.டி எஞ்சினியர் ராகுல் என்பவரின் மகள்தான் என்பது தெரியவந்துள்ளது. பெங்களூர் பகுதியில் ராகுல்( ஐ.டி எஞ்சினியர்) என்பவர் தனது மனைவி பாபியா மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதமாக வேலை ஏதும் இன்றி தவித்துள்ள நிலையில் தன்னிடம் இருந்த பணத்தை பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை முழுவதும் இழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பலரும் தங்களின் பணத்தை மீண்டும் கேட்டு கெடுபிடி செய்துள்ளனர்.இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த ராகுல், தன்னுடைய மகளுடன் அருகில் உள்ள ஏரிக்கு சென்று மகளை கட்டியணைத்து விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது மகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்துள்ளார். அத்துடன் பசிக்கிறது சாப்பாடு வேண்டும் என்று மகள் கேட்டு அடம்பிடித்துள்ளார்.
பிஸ்கட் வாங்கி கொடுப்பதற்கு மட்டுமே பணம் வைத்திருந்த நிலையில், வேறு வழியின்றி மகளை தூக்கி ஏரியில் வீசியுள்ளார். இந்த செயலால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன் ராகுலும் தற்கொலை செய்ய முயற்சி செய்யவே, தண்ணீர் குறைவாக இருந்த நிலையில் அவர் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ராகுலை கைது செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.