பெற்ற மகளை உறவினர்களுக்கு விருந்தளித்த தந்தை..!! குடிபோதையில் தினந்தோறும் அரங்கேறிய கொடூரம்..!!

பெற்ற மகளை இரண்டு பேருடன் சேர்ந்து குடிபோதையில் தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம், மேல காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (45). இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டு பெண் குழந்தைகள் தந்தை வளர்ப்பிலும், ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை தாத்தா பாட்டியிடமும் வளர்ந்து வந்துள்ளனர். தந்தையிடம் வளர்ந்து வந்த பெண் குழந்தைகளில் ஒருவர் மாற்றுத்திறனாளி (13). இந்நிலையில், தந்தை கார்த்திக், குடிபோதையில் தினந்தோறும் அந்த மாற்றுத்திறனாளி மகளை பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனை தெரிந்து கொண்ட சிறுமியின் மாமன் சுதாகர் மற்றும் அதே தெருவை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் இந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குழந்தையின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து அருகில் வசிப்பவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இதை கேட்ட அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், திருவாரூரில் உள்ள சமூக குழந்தைகள் நலன் பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பெற்ற மகளை உறவினர்களுக்கு விருந்தளித்த தந்தை..!! குடிபோதையில் தினந்தோறும் அரங்கேறிய கொடூரம்..!!

இதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை, மாமன் உள்பட 3 பேர் மீதும் குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அரித்துவாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தந்தை கார்த்தி, மாமன் சுதாகர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், தலைமறைவான ராஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

CHELLA

Next Post

அடேங்கப்பா…! துணிவு திரைப்படம் முதல் நாளில் இவ்வளவு வசூலிக்குமா…?

Thu Jan 5 , 2023
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் சென்ற வருடம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது. 150 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், வினோத் இயக்கத்தின் வெளியான வலிமை திரைப்படம் அஜித்தின் இருசக்கர வாகன ரேசிங்கை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. தற்சமயம் வினோத், போனி கபூர், அஜித் உள்ளிட்டோரின் கூட்டணியில் துணிவு என்ற திரைப்படம் […]
thunivu ajith kumar

You May Like