திருவண்ணாமலை அருகே…..! லஞ்சம் வாங்கிய மகளிர் காவல்நிலைய பெண் எஸ்.ஐ அதிரடி கைது…..!

திருவண்ணாமலை அடுத்துள்ள கீழ்பானந்தல் கிராமத்தில் வசிப்பவர் வெற்றிவேல், இவருடைய மனைவி பரிமளா, இந்த தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் பூந்தமல்லியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு பரிமளா சென்று விட்டார். அதோ,டு அவர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றையும் வழங்கினார்.


இது தொடர்பாக வெற்றிவேலை அழைத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி கடந்த 11ஆம் தேதி விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் காவல் நிலைய செலவு என்ற பெயரில் 3000 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் கடந்த 12ஆம் தேதி வெற்றிவேல் புகார் வழங்கினார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரிடம் லஞ்சமாக 3000 ரூபாய் பணத்தை வெற்றிவேல் நேற்று வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர், காவல் நிலையத்தில் பரமேஸ்வரியை கையும் களவுமாக பிடித்தனர்.

அத்துடன் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பரமேஸ்வரியை கைது செய்தனர் 3000 ரூபாய் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Post

சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை….! 14.43 கோடி மதிப்பிலான 23.34 கிலோ தங்கம் சிக்கியது….!

Sun May 14 , 2023
துபாயிலிருந்து கொழும்பு மூலமாக சென்னைக்கு விமானத்தில் வந்த ஒரு பெண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அந்த பெண்மணி ஆட்டோவில் ஏறி கிளம்பினார். அவரை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள், அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் 8.28 கோடி ரூபாய் மதிப்பிலான 13.28 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய […]
1659708 gold

You May Like