கோவில்களில் திருவிழாவிற்கென விழாக்குழு அமைக்க கூடாது- உத்தரவு பற்றி தெரியுமா ?

மதுரைக்கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மேலும் இந்த கோவில் திருவிழாக்களின் போது, எந்த தனிநபரும் கமிட்டி அமைக்க கூடாது என ஏற்கனவே 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் திருவிழா நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. எனவே இந்து சமய அறநிலை துறை தலையிட்டு நேரடியாக திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும். உத்தரவை மீறிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.


இந்த மனு ஏற்கனவே நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் ஆஜராகி தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில், திருவிழா காலங்களில் திருவிழாக்கென குழு அமைக்க கூடாது என அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனை மீறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

1newsnationuser1

Next Post

லாரி ஓட்டுனரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டிய இரண்டு இளைஞர்கள்.! கடைசியில் நடந்தது என்ன??

Wed Jun 7 , 2023
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கேசவன் ராஜ் என்ற லாரி ஓட்டுநர் தூத்துக்குடியில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற போது இன்று அதிகாலையில் பல்லடத்தில்  தாராபுரம் பிரிவில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரிக்கு எதிரே கோவையில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த பரணிதரன் மற்றும் அபிஷேக் குமார் ஆகிய இருவரும் லாரியை உரசுவது போல காரை இயக்கியுள்ளனர். சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் கேஷ்வன்ராஜ் […]
gunpoint

You May Like