குழந்தையின் வயிற்றில் கரு.. அதிர்ந்து போன மருத்துவத்துறை.!

ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்நகர் மாவட்ட பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சென்ற மாதம் 10ஆம் தேதி அன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் மார்பு எலும்புக்கு கீழே வயிற்றில் கட்டி போல் இருந்ததை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள்.


இதனையடுத்து இந்த மாதத்தின் 1 ஆம் தேதி அன்று அறுவை சிகிச்சை நடந்தது. அந்த கட்டியை மருத்துவர்கள் பரிசோதித்த போது அதில் 8 கருக்கள் உருவாகி இருந்தன. ஒவ்வொரு கருவும் 3 முதல் 5 சென்டிமீட்டர் வரை இருந்தன. இது மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தை அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் செய்யப்படும் என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

மருத்துவ உலகின் பிரமிப்பு நிகழ்வாக பிறந்த குழந்தையின் வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகியுள்ளது. இந்த நிகழ்வானது பிறக்கும் ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தான் இது போன்று கரு உருவாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் இம்ரான், பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் உருவாகியது இதுதான் முதல் முறை. மேலும் இது மருத்துவ உலகின் மிக அரிய நிகழ்வு என்றும் தெரிவித்திருக்கிறார்.

1newsnationuser5

Next Post

#அரியலூர் : நிர்வாண நிலையில் தூக்குமாட்டி இறந்த இளைஞர்.!

Sat Nov 5 , 2022
அரியலூர் மாவட்டம் மகிமைபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த அலமேலு என்பவரின் முந்திரி தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 38 வயது வாலிபர் ஒருவர் தான் அணிந்திருந்த பேண்டால் தூக்கு போட்டு, நிர்வாண நிலையில் இறந்துள்ளார். ஆடு, மாடு மேய்க்க அந்த வழியாக சென்றவர்கள் அதனை பார்த்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த போலீசார்  இறந்தவரின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
76a2880970130cb3eb77e35a331ba557 XL

You May Like