பெரம்பலூர் அடுத்த துறையூர் சாலையில் கார், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.. இன்று காலை 6 மணியளவில் பெரம்பலூரில் இருந்து அரியலூரை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அப்போது டி.களத்தூர் பிரிவு பாதை அருகே, எதிரே வந்த லாரி காரின் மீது பயங்கரமாக மோதியது.. இந்த விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது..
இந்த விபத்தில் சிக்கி காரில் சென்ற சங்கர், சக்தி, விஜய் ஆகிய 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.. இந்த விபத்து காரணமாக பெரம்பலூர் – துறையூர் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.. காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்த நிலைமை பின்னர் சீரானது.. விபத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநரை அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



