வசமாக சிக்கினார் மாஜி அமைச்சர் எ.வ.வேலு..! லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார்..!

Velu DMK 2026

திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் இருந்து ரூ.8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளது.


அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகாரில், 2025 டிசம்பர் 14ம் தேதி மலப்பம்பாடியில் திமுக வடமண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இந்த மாநாடு நடைபெற்ற 124 ஏக்கர் நிலம், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு சொந்தமான நிறுவனம் வாங்கிய நிலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு இடத்தை சமன்படுத்துவதற்காக, அருகிலுள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 45 லட்சம் கன அடி மண் எடுக்கப்பட்டு, அரசுக்கு ரூ.8 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மாநாட்டுக்காக ஏரிக்கரையில் அணுகுசாலை அமைக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகபும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

எ.வ.வேலு, எ.வ.குமரன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேடாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே, கடந்த ஜூன் 25ம் தேதி, கரூரில் சாலையே அமைக்காமல் அமைத்ததாகக் கூறி ரூ.3.2 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More : இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு… மனைவியை அழைத்துச் சென்று கொன்ற கணவர்! அனாதையாக நிற்கும் 3 குழந்தைகள்…

Next Post

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை சிக்கவைக்க மனைவி போட்ட சதி?… கூரியரில் வந்த பல கோடி ரூபாய் போதைப் பொருட்கள்!

Thu Aug 13 , 2026
திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்கு வந்த கூரியர் பார்சல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்சலைத் திறந்தபோது பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இருந்த நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் அந்தப் பார்சலின் பின்னணியில் அவரது மனைவிக்கும் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 4 கிலோ கொக்கைன், 80 கிராம் சரஸ் மற்றும் தடை செய்யப்பட்ட மனநல மாத்திரைகள் உள்ளிட்ட […]
WhatsApp Image 2026 08 13 at 4.48.17 PM 1

You May Like