ஓசூர் அருகே பயங்கர விபத்து! சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுமி பரிதாபமாக பலி – 2 பேர் படுகாயம்!

ஓசூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு வயது குழந்தை பரிதாபமாக இருந்துள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தம்பள்ளியைச் சார்ந்தவர் நாகராஜ். 30 வயதான இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார். இவர் சம்பவம் நடந்த தினத்தன்று மனைவி மற்றும் தனது மகளுடன் ராயக்கோட்டை என்ற பகுதிக்கு சென்று இருக்கிறார். அப்போது கேலமங்கலம் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்று கெத்தன பள்ளி அருகே வைத்து இவரது பைக் மீது மோதியது.


இந்த சம்பவத்தில் அவரது நான்கு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. விபத்தில் காயமடைந்த மனைவி மற்றும் கணவராகிய இருவரும் தற்போது அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் முனியம்மாள் மற்றும் நாகராஜன் ஆகியோரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

1newsnationuser5

Next Post

ராணுவ பயிற்சியில் கிராமத்தில் ஷெல் குண்டு விழுந்து வெடித்து 3 பேர் பலி!

Wed Mar 8 , 2023
ராணுவ பயிற்சியின் போது சில நேரங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடும். ராணுவ பயிற்சிகளின் போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது என்பது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிகழ்வு. இன்று உலகில் அதிகமான அளவு ராணுவத்திற்கு மக்கள் செலவிடுகின்றனர். ராணுவ வீரர்கள் நம் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து அதற்காக தங்களது இன்னுயிரையும் தர தயாராக இருப்பதால் நமக்கு அவர்களின் மீது எப்போதும் ஒரு அளவு கடந்த அன்பும் மரியாதையும் […]
IMG 20230308 WA0082

You May Like