இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 1முதல் 5 ஆம் வகுப்பு வரை 2023-2024 ஆம் ஆண்டு மாணக்கர்கள் சேர்க்கைநடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியானது தருமபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசுமேல்நிலைபள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கி பயிலும் வகையில் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி பயின்ற ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு விடுதியில் மூன்று வேளையும் சத்தான உதவித்தொகை உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இலவச சிருடை, சிறப்பு கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து சலுகை, கல்வி உதவித்தெகை போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
