தருமபுரி மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க நாள் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. 1-வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படும்.
தேசிய குடற்புழு நீக்க நாளில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 21-02-2023 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அன்றைய தினத்தில் விடுபட்ட அனைத்து சூழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை தவறாமல் வழங்கப்படும்.இப்பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினருடன் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, உயர் கல்வி துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 5.15 இலட்சம் சூழந்தைகளுக்கும் மற்றும் 20-வயது முதல் 30-வயது வரை உள்ள 1.22 இலட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.