AI தடை முதல் பயோமெட்ரிக் அடையாளம் காணல் வரை.. ஒட்டு மொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்த சீனா..!! ஷாக் ஆகாம படிங்க..

china chartgpt

சீனாவின் ‘காவோகாவோ’ (Gaokao) எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. நாட்டின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வில், 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுகளின் நேர்மையைக் காக்கும் முயற்சியாக, அலிபாபா, டென்சென்ட், பைட் டான்ஸ் போன்ற முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய AI (Artificial Intelligence) அம்சங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன.


AI-க்கு தடை: சீனாவில் நடைபெறும் முக்கியமான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை (Gaokao) எழுதும் மாணவர்கள் சிலர், தேர்வில் வந்த கேள்விகளை தங்கள் மொபைலில் படம் எடுத்து, AI செயலிகளில் பதில் கேட்டுள்ளனர். ஆனால், AI செயலிகள் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை.

அதற்கு பதில் அந்த AI செயலிகள், “இது பல்கலை நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் காலம்… இப்போது கேள்வி-பதில் (Q&A) வசதிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. நியாயமான தேர்வை உறுதி செய்யும் நோக்கத்தில்தான் இந்த முடக்கம்” என்று பதில் அளித்தது. அதேபோல், DeepSeek என்ற பிரபலமான உருவாக்க நுண்ணறிவு (Generative AI) கருவியும், ஏற்கெனவே தேர்வுக் காலத்தில் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

சீனாவின் Gaokao என்ற நுழைவுத் தேர்வு என்பது மிக முக்கியமானது. இதில் தேர்ச்சி பெறுவதுதான் பல மாணவர்களுக்கு உயர் கல்விக்கான முதல் படியாக அமையும்.
அதனால், இதுபோன்ற தேர்வுகளில் யாரும் நியாயமில்லாமல், ஏமாற்றம் ஏற்படாமல் எழுத வேண்டும் என்பதற்காக பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

AI கேமரா: தேர்வு எழுதும் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் பேசுகிறார்களா? மேலோட்டமாக யாரையாவது பார்க்கிறார்களா? ஏதேனும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் நடத்தை காட்டுகிறார்களா? இதை தானாகவே அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் கூடிய கமெராக்கள், தேர்வுகள் நடைபெறும் கூடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அந்தக் கமெராக்கள் மாணவர்களின் நடத்தை, முக சாயல், கண் பார்வை போன்றவற்றை தொடர்ந்து கவனித்து, சந்தேகமான செயல்களை கண்டதும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனே தகவல் அளிக்கின்றன.

பயோமெட்ரிக் அடையாளம் காணல்: சில மாணவர்கள் மாற்றாக வேறு ஒருவரை தேர்வு எழுத அனுப்பக்கூடிய மோசடிகள் ஏற்படக்கூடும். அதைத் தடுப்பதற்காக, மாணவர்கள் தேர்வுக்குள் நுழைவதற்கு முன்பு முகம், விரல்தடம் போன்ற உடல் அடையாளங்களைச் சோதிக்கப்படும். இதன்மூலம் அந்த மாணவர் உண்மையில் அவர் தானா என்பதை உறுதி செய்கிறார்கள்.

ரேடியோ சிக்னல் தடுப்பு கருவிகள்: சில மாணவர்கள், மொபைல், புளூடூத், சிம்கார்ட் சாதனங்கள் போன்றவற்றை ரகசியமாக பயன்படுத்தி வெளியிலிருக்கும் ஒருவரிடமிருந்து பதில்கள் பெற முயற்சி செய்யலாம். இதைத் தடுக்க, தேர்வுக் கூடத்தில் ரேடியோ ஜாம்மர் (Radio Jammer) எனப்படும் கருவிகளை பயன்படுத்துகிறார்கள். இது அந்த இடத்தில் மொபைல் நெட்வொர்க், Wi-Fi, புளூடூத் போன்ற அனைத்து சிக்னல்களையும் முடக்கி விடும்.

டிஜிட்டல் சாதன பரிசோதனைகள்: தேர்வுக்கு வருவோர் செல்போன், Smartwatch, Earbuds போன்ற சாதனங்களை எடுத்துச் சென்றாலா? அவற்றில் ஏதேனும் படங்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், எழுத்துக் கோப்புகள் உள்ளதா? என்பதை சோதிக்க டிஜிட்டல் பரிசோதனைகள் (Device Scanners) பயன்படுத்தப்படுகின்றன.

சீன அரசு இந்த Gaokao தேர்வை மிகவும் கடுமையான ஒழுங்குகள் மற்றும் பாதுகாப்புடன் நடத்துகிறது. மாணவர்கள் முயற்சி, திறமை மற்றும் நேர்மையால் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

Read more: நடிகர் மம்மூட்டி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல்..!

Next Post

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்.. அரசாணை பிறப்பிக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை..!!

Wed Jun 11 , 2025
ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் […]
chennai high court

You May Like