டிசம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடையப் போகிறது, ஜனவரி மாதம் தொடங்கப் போகிறது. ஜனவரி மாதம் மட்டுமல்ல, 2026-ஆம் ஆண்டும் தொடங்கப் போகிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எரிவாயு சிலிண்டர் விலை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்ற விஷயங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரியிலும் சில பெரிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரியில் ஏற்படவிருக்கும் மாற்றங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்:
வேகமான கிரெடிட் ஸ்கோர் புதுப்பிப்புகள், கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படுவது ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன.
கேஸ் சிலிண்டர் விலை:
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் விலைகளைத் திருத்தி அமைக்கின்றன. இதன் விளைவாக, எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம். அது அதிகரிக்கலாம், குறையலாம் அல்லது மாறாமல் இருக்கலாம்.
விரைவான கிரெடிட் ஸ்கோர் புதுப்பிப்பு:
முன்பு, கிரெடிட் ஸ்கோர் புதுப்பிக்கப்பட்டு பிரதிபலிக்க 30 முதல் 45 நாட்கள் ஆனது. இதனால், பலரும் கடன் பெறுவதில் சிரமப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில், கிரெடிட் ஸ்கோர் புதுப்பிக்கும் காலம் குறைக்கப்பட உள்ளது. அதாவது, 2026 ஜனவரி முதல், கிரெடிட் ஸ்கோர் 15 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
குறைந்த வட்டி கடன்கள்:
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025-ஆம் ஆண்டில் ரெப்போ விகிதத்தை பலமுறை குறைத்துள்ளது. இதன் காரணமாக, 6.50 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம், தற்போது 5.25 சதவீதமாக உள்ளது. இதனால், எதிர்காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் கிடைக்கும்.
பான்-ஆதார் இணைப்பு:
ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவை இந்தியாவில் இரண்டு முக்கியமான ஆவணங்கள் ஆகும். இந்தச் சூழ்நிலையில், ஜனவரி முதல் பான்-ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பான்-ஆதார் அட்டை இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு செயலிழந்துவிடும்.
செயலிகளுக்கு சிம் கார்டு கட்டாயம்:
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு சிம் கார்டு கட்டாயம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. செயலிகளுக்கான சரிபார்ப்பு செயல்முறை முன்பு ஜிமெயில் கணக்கு மூலம் செய்யப்பட்டது. இப்போது செயலி சரிபார்ப்புக்கு சிம் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு இல்லாமல் செயலிகளைத் திறக்க முடியாது.
அரசு ஊழியர்களின் சம்பளம்:
8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்தச் சூழ்நிலையில், அகவிலைப்படியை (DA) உயர்த்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகவும், இது அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Read More : ‘ChatGPT போன்ற செயல்பாடுகள்’ : இந்தியாவின் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் தொடக்கம்..!



