காதலி கிடைக்காத விரக்தி.. பேஸ்புக் லைவில் இளைஞர் தற்கொலை.!

உத்தரபிரதேசம் மாநில பகுதியில் வசிக்கும் இளைஞன் தன் காதலி தனக்கு துரோகம் செய்ததாக கூறி பேஸ்புகில் லைவ் மூலம் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பேஸ்புக்கில் லைவ் வீடீயோவில், ​​அந்த இளைஞன் தான் காதல் செய்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து திட்டியுள்ளார். இந்த நிலையில் , பலரும் அவரை தற்கொலை செய்ய விடாமல்தடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி மிக வேதனையுடன் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், காதலித்த பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாகவும், காதலியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மனவேதனையுடன் இருந்த அந்த நபர் , பேஸ்புக் லைவ்வில் காதலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரைக் கூறிகொண்டே கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

வெளிநாட்டுக் கணவரை மகன், மகளுடன் சேர்ந்து தீர்த்துக் கட்டிய மனைவி.! அம்பலமானது நாடகம்.!

Fri Nov 11 , 2022
வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம், மனைவி தீபா மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.மகன் புஷ்பநாதன் 12ம் வகுப்பு மற்றும் மகள் கலைவாணி(15) பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆறுமுகம் சுமா‌ர் 13 ஆண்டுகள் வெளிநாட்டு வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு மீண்டும் வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த 7-ம் தேதி ஆறுமுகம் இறந்ததாக கூறப்படுகிறது. […]
9912murder16

You May Like