உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசு அமைத்த நிபுணர்கள் குழுவின், வரைவு தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, பொது சிவில் சட்ட வரைவைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது பணியை நிறைவு செய்துள்ளது. மாநிலத்தில் விரைவில் இந்த பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாநிலத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான நடந்த தேர்தலில் மொத்த 70 தொகுதிகளில் 47 இடங்களை வென்று அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது., வெற்றிக்கு பிறகு பேசிய உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பாஜக அரசு ஆட்சியமைத்த உடனே தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல, பொது சிவில் சட்ட மசோதாவை கொண்டு வரும் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.