திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமி தீயில் கருகி பலி…..! பெற்றோர் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்…..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள் வைஷ்ணவி (8) அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் இந்த நிலையில், சிவகுமாரும், அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர்.


தற்சமயம் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் வைஷ்ணவி அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக வைஷ்ணவியின் உடலில் தீ பற்றியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வைஷ்ணவி கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை சிறுமி வைஷ்ணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

விருதுநகர் அருகே 10ம் வகுப்பு மாணவன்…..! கண்மாயில் மூழ்கி பரிதாப பலி……!

Sat May 13 , 2023
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள புங்கமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேல்சாமி, இவருடைய மனைவி செல்வி. இந்த தம்பதிகளுக்கு ரூபன்(14) என்ற மகன் இருந்தார். இவர் சூரப்ப நாயக்கன்பட்டியில் இருக்கின்ற தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார் மாணவர் ரூபன். இத்தகைய நிலையில் தான் பள்ளி விடுமுறையை முன்னிட்டு புங்கமரத்துப்பட்டியில் இருக்கின்ற பெற்றோரின் வீட்டிற்கு […]
viruthunagar

You May Like