ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. இரண்டு ஆண் நண்பரை ஒரே நேரத்தில் காதலித்த பெண்..!

மத்தியப் பிரதேச மாநில பகுதியில் உள்ள அமினோரில் வசித்து வரும் பெண் ஒருவர், ஆண் நண்பர் ஒருவரை காதலித்துள்ளார். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு அதேசமயத்தில், மற்றொரு ஆண் நண்பரை, இந்தப் பெண் காதலித்ததாகக் கூறப்படுகிறது. 


இதனைப் பற்றி, முதல் காதலருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தற்போதைய காதலரைச் சந்தித்து அனைத்தையும் விளக்கியிருக்கிறார். இதனால், கோபமடைந்த இருவருமே, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நண்பர்கள் சிலருடன் சென்றுள்ளனர். 

உண்மையிலேயே நீ யாரைக் காதலிக்கிறாய் எனக் கேட்டு மிரட்டி பலமாக தாக்கியிருக்கின்றனர். இதனால் பயந்துபோன அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்று வெளியில் ஓடியுள்ளார். அப்போதும் காதலர்கள் அந்தப் பெண்ணை விடாமல் துரத்தியுள்ளனர். 

மேலும் பயந்துபோன அப்பெண் அருகில் இருந்த ஒரு கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி கிராம மக்கள், அந்தப் பெண்ணையும் மீட்டு முதலுதவிக்காகச் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தப்பியோடிய நண்பர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#தென்காசி: நிலத்தகராறில் மாறி மாறி வெட்டிக் கொண்டு இறந்த சோகம்..!

Fri Jan 20 , 2023
தென்காசி மாவட்ட பகுதியில் உள்ள சங்கரன்கோவிலின் அருகே இருக்கும் வாசுதேவநல்லூரில் வசித்து வந்தவர்கள் ஐயப்பன் மற்றும் செல்லதுரை என்பவர்கள். இருவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் நில பிரச்சனை தொடர்பாக பெரும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் மாறி மாறி பலமாக தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்லதுரை ஐயப்பனை அரிவாளால் […]
murder 1

You May Like