Gold Rate | புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!! ஒரு சவரன் ரூ.53,000-ஐ கடந்தது..!!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 360 ரூபாய் உயர்ந்துள்ளதால், ஒரு சவரன் 53,280-க்கு விற்பனையாகிறது.

தென்னிந்திய அளவில் அதிக தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதற்கு காரணம், தங்க நகை மீது பெண்களுக்கு இருக்கும் மோகம் தான். ஒரு காலத்தில் பூக்களோடு பொன்னை ஒப்பிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியெல்லாம், ஒப்பிட முடியாத அளவிற்கு வரலாறு காணாத விலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஏப்.6) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும் , சவரன் ரூ.52,920க்கும் விற்பனையானது. இதனால் தங்கம் விலை ரூ.53,000-ஐ நெருங்கும் நிலையில் சாமானியர்கள் கலக்கம் அடைந்தனர்.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்க நகை ரூ.53,280-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கும் விற்பனையாகிறது. வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நகை விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read More : செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை..!!

Chella

Next Post

ரூ.4,000 கோடி கமிஷன் அடிக்கவே இந்த அறிவிப்பு..!! முதல்வர் இதைச் செய்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்..!! அண்ணாமலை அதிரடி..!!

Mon Apr 8 , 2024
கிரிக்கெட் மைதானம் கட்டினால் 4,000 கோடி ரூபாய் அளவுக்கு கமிஷன் அடிக்கலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சரவணம்பட்டி, கரட்டுமேடு, கேஜி பேக்கரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகரில் ஏராளமான பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. […]

You May Like