பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகளை நடத்தி வருகின்றன.. நாடு முழுவதும் சுமார் 4.99 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப ரேஷன் கடைகளை அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது..

இந்நிலையில் மத்திய அரசின் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) மூலம், டிசம்பர் 2023 வரை நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, மத்திய அரசு இலவச ரேஷன் வழங்குகிறது. இந்த நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன் அந்த்யோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை, அரிசி, தினை, சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கோதுமை, அரிசி, தினை விநியோகம் மார்ச் 5, முதல் தொடங்கி, மார்ச் 20 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு 35 கிலோ கோதுமை, 20 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ தினை இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே நாடு முழுவதும் உள்ள அனைத்து அந்த்யோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கும் டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் கிடைக்கும் என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்த இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…