பெற்றோருடன் நேரத்தை செலவிட சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது அஸ்ஸாம் மாநில அரசு.
அஸ்ஸாம் மாநில அரசு தற்போது தனது ஊழியர்களுக்கு பெற்றோருடன் நேரத்தை செலவிட சிறப்பு தற்செயல் விடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊழியர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறையைப் பெறலாம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சிறப்பு விடுமுறைகளை விண்ணப்பிப்பதற்கும் பெறுவதற்கும் விரிவான விதிகள் மற்றும் வழிமுறைகள் ஒரு சிறப்பு இணையதளத்தின் மூலம் தெரிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சிறப்பு விடுமுறைகள் அடுத்த இரண்டு நாட்களில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு வழக்கமான விடுமுறைகளுடன் இணைக்கப்படும், இதனால் ஊழியர்கள் நான்கு நாட்கள் தங்கள் பெற்றோருடன் செலவிட முடியும். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, 2021 இல் பதவியேற்ற பிறகு சுதந்திர தினத்தன்று தனது முதல் உரையில், மாநில அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இது நடைமுறைக்கு வந்துள்ளன.