செம வாய்ப்பு…! திங்கள் தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு…! எப்படி விண்ணப்பிப்பது…?

தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத்‌ தமிழக அரசால்‌ தோற்றுவிக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பல்வேறு கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சிப்‌ பணிகள்‌ பல ஆண்டுகளாகத்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில்‌ தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன்‌, தமிழ்‌ முதுகலை, இந்நிறுவனத்தில்‌ ஆண்டுதோறும்‌ தொடர்ந்து நடத்தப்‌ பெற்று வருகின்றன. 2023-24ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப்‌ படிப்புக்கான மாணவர்‌ சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது.


விண்ணப்பங்கள்‌ தஞ்சை தமிழ்ப்‌ பல்கலைக்கழக www.tamiluniversity.aic.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ அல்லது அஞ்சல்‌ வழியிலும்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌. உலகத்‌ தமிழாராய்ச்சி நிறுவன வழியாக இப்பட்டப் படிப்பினை பயில விரும்புவோர்‌ சேர்க்கைத்‌ தொடர்பான விதிமுறைகள்‌/தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

இவ்வகுப்பில்‌ சேர்க்கைப்‌ பெறும்‌ மாணவர்களுள்‌ நுழைவு தேர்வு மதிப்பெண்‌ அடிப்படையில்‌ 15 மாணவர்களுக்கு தமிழக அரசால்‌ கல்வி உதவித்‌தொகையாக திங்கள்‌ தோறும்‌ ரூ.2000/- வீதம்‌ வழங்கப்படும்‌.

IMG 20230527 055758

Vignesh

Next Post

வந்தாச்சு...! சாலையோர உணவு கடைகளுக்கு கட்டுப்பாடு...! இதை பயன்படுத்த தடை...! ஆட்சியர் அதிரடி உத்தரவு...!

Sat May 27 , 2023
இது குறித்து நாமக்கல்‌ மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ உள்ள சாலையோர உணவு வணிகர்கள்‌, தள்ளுவண்டி கடைகளுக்கு கட்டாயம்‌ உணவு பாதுகாப்பு உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும்‌ மற்றும்‌ கடைகளில்‌ சுத்தம்‌ மற்றும்‌ சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்‌. தரமான குடிநீர்‌ வழங்கப்பட வேண்டும்‌. இரவு நேரம்‌ மட்டும்‌ செயல்படும்‌ உணவு கடைகள்‌, சில்லி கடைகள்‌, பாஸ்ட்‌ஃ புட்‌ கடைகளில்‌ செயற்கை நிறமிகள்‌ மற்றும்‌ அஜினமோட்டோ பயன்படுத்தக்‌ கூடாது, ஈக்கள்‌ […]
IMG 20230527 061327

You May Like