தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் முதுகலை, இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப் பெற்று வருகின்றன. 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது.
விண்ணப்பங்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக www.tamiluniversity.aic.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வழியாக இப்பட்டப் படிப்பினை பயில விரும்புவோர் சேர்க்கைத் தொடர்பான விதிமுறைகள்/தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வகுப்பில் சேர்க்கைப் பெறும் மாணவர்களுள் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு தமிழக அரசால் கல்வி உதவித்தொகையாக திங்கள் தோறும் ரூ.2000/- வீதம் வழங்கப்படும்.
