நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49) இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (45) இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் ஒரு மகன் என்று 3 குழந்தைகள் இருக்கின்றன.
இத்தகைய நிலையில், செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய உடலை பரிசோதனை செய்தார். அப்போது ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்வதில் அவருக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதாகவும், அதே போல உடலில் ரத்த அழுத்தம் அளவும் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதன் காரணமாக, மனம் உடைந்த நிலையில், காணப்பட்ட அவர் வீட்டில் இருக்கும் போது நான் சீக்கிரமாக இறந்து விடுவேன் என்று புலம்பி கொண்டு இருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கு கூட்டத்தில் அமர்ந்து அங்கே அவர் வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்திருக்கிறார்.
அதன் பிறகு வீட்டிற்கு சென்று தன்னுடைய மனைவி மல்லிகாவிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போனேன் அவரது மனைவி மல்லிகா உடனடியாக அவசர உறுதிக்கு போன் செய்து நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கணவரை அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு அங்கிருந்து ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு, அதன் பிறகு அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக செல்வராஜின் மனைவி மல்லிகா நல்லூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.
அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.