சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நாடு முழுவதும் இருந்து 4,500 தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 202 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொழிற்பயிற்சியாளர்கள் சட்டம், 1961 கீழ் மத்திய அரசின் நிறுவனங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி படிப்பை முடித்தவர்கள் பணிக்கான அனுபவத்தை பெறும் வகையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், பொதுத்துறை வங்கிகளில் நாடு முழுவதும் இப்பயிற்சிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, 1 வருடம் வங்கி பணிக்கான தொழிற்பயிற்சி உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 2025-26-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவை எஸ்சி – 688 , எஸ்டி – 382, ஒபிசி – 1036, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 450, பொதுப்பிரிவு – 1944 என நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 202 பணியிடங்கள் உள்ளன. அவை எஸ்சி – 38 , எஸ்டி – 2, ஒபிசி – 54, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் – 20, பொதுப்பிரிவு – 88 என நிரப்பப்படுகிறது.
சென்ட்ரல் பேங்க் தொழிற்பயிற்சி இடங்களுக்கு 31.05.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையும் தளர்வு உள்ளது. தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
வங்கியில் பயிற்சி பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வு நடத்தப்படும். இறுதியாக கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 12 மாதங்கள் வங்கி பணிக்கான பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து, “Central Bank of India” என இருக்கும் தொழிற்பயிற்சி அறிவிப்பை கிளிக் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை https://www.centralbankofindia.co.in/ என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கான தேர்வு கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் ரூ.600 மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.400 செலுத்த வேண்டும். கூடுதலாக 18% வசூலிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.06.2025.விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 07.06.2025 முதல் 25.06.2025. ஆன்லைன் எழுத்துத்தேர்வு ஜூலை முதல் வாரம் ஆகும்.
Readmore: மத்திய பாதுகாப்பு படையில் வேலை.. 453 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..