திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள சியஞ்சேரியில் 18 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு காகலூரைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக இருவரும் நெருக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களான சதீஷ் மற்றும் சாம்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.