கவனம்…! 10 & 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால்டிக்கெட்… நாளை செய்முறைத் தேர்வு…!

School Exam 2025

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் தேர்வர்கள் உள்பட ) தேர்வுக் கூட ஹால்டிக்கெட் இன்று அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அப்போது, விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.

11-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான தேதி, நாள் தொடர்பான விவரங்களை தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பு நடைபெறும் பள்ளியிலேயே செய்முறைத் தேர்வு வரும் 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் இதுதொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரியை அணுகி தெரிந்துக் கொள்ளலாம். 10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Read more: விளையாட்டு வீரர்களுக்கு சல்யூட்!. இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம்!. பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள்!.

Vignesh

Next Post

ஆஹா!. இனி பிஎஃப் மூலம் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம்!. 72 மணி நேரத்திற்குள் தீர்வு!.

Wed Jun 25 , 2025
வருங்கால வைப்பு நிதி(PF) சந்தாதாரர்கள், இப்போது அவசரகாலங்களில் ரூ.5 லட்சம் வரை பணம் எடுக்கலாம். மேலும் கோரிக்கை 72 மணிநேரத்திற்குள் தீர்க்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா அறிவித்துள்ளார். இது முந்தைய அவசரகால பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ஐந்து மடங்கு அதிகரிப்பு ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ், கோரிக்கை செயல்முறையை நெறிப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும், மேற்கொள்ளப்படும் பரந்த சீர்திருத்தங்களின் […]
EPFO 11zon

You May Like