மக்களிடையே ஆன்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் மீது இருக்கும் ஈர்ப்பை காட்டிலும் விலை உயர்வாக இருந்தாலும் ஆப்பிள் சாதனங்கள் மீது எப்போதுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையாகின்ற அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களிலும் டைப் சி போர்டு கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை வரும் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளன என ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் டைப் சி போர்டுக்கு சமீக காலத்தில் மாறியுள்ளன. ஆனால் ஆப்பிள் மட்டும் இதற்கு எவ்வித விளக்கமும் அளிக்காத நிலையில் இனி வரும் ஐ ஃபோன்கள் டைப் சி போர்டுகளாக தான் வெளியாகும் என ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.