உங்களுக்கு முதல் குழந்தை பிறந்திருக்கா..? எப்போதெல்லாம் பிரச்சனை வரும்..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

குழந்தை வளர்ப்பு என்பது மிக கடினமான ஒன்றுமல்ல, மிக எளிதான ஒன்றுமல்ல. சிலர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தையை அதன் போக்கில் விட்டுவிடுவார்கள். ஏதேனும் பிரச்சினை வந்தால் மட்டுமே அவர்கள் கவலை அடைவார்கள். சிலர் குழந்தை மீது அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் அச்சம் அடைவார்கள். உண்மையில், குழந்தை வளர்ப்பில் அதீத அக்கறை மற்றும் அலட்சியம் என இரண்டுமே தவறானது தான். குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவற்றை செய்து கொடுக்க வேண்டும். குழந்தையின் உடல் நலன் தொடர்பாக என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து வைத்து செயல்பட வேண்டும். இதனால் தேவையற்ற பதற்றங்களை தவிர்க்கலாம்.


வழக்கத்திற்கு மாறாக மூச்சு விடுதல் :

குழந்தைகளுக்கு பல சந்தர்பங்களில் மூச்சு இரைப்பது போல தென்படும். சில சமயம், மூச்சு விடாததைப் போல இருக்கும். இதைப் பார்த்து சட்டென்று பயந்துவிடக் கூடாது. மூக்கில் ஏற்படுகின்ற அடைப்புகள் காரணமாக இவ்வாறு நடக்கலாம்.

ஹார்மோன் மாற்றம் :

குழந்தை சில சமயம் அசைவின்றி காணப்படும். உடலில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சேருவதே இதற்கு காரணம். கர்ப்பப்பை வழியாகவும், தாய்ப்பால் வழியாகவும் இந்த ஹார்மோன் குழந்தைக்கு சென்றடைகிறது.

தூக்கி வாரிப்போடுதல் :

குழந்தை அசந்து தூங்கும் சமயம் அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தூக்கிவாரிப் போட்டதைப் போல காணப்படும். தூக்கத்தில் நிகழுகின்ற சாதாரண பிரச்சனை இது. இதுகுறித்து அச்சப்பட வேண்டாம்.

மார்பில் கட்டிகள் :

உங்கள் குழந்தையின் மார்பு பகுதியில் ஏதேனும் புள்ளிகள் அல்லது கட்டிகள் தென்படலாம். மார்பு வளர்ச்சிக்காக ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோலேக்டின் ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரப்பதன் எதிர் விளைவாக இதுபோல தென்படலாம்.

மார்பில் பால் :

ஆண் குழந்தைகள் சிலரின் மார்புக் காம்புகளில் இருந்து பால் போன்ற திரவம் கசியும். இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் இது நிகழ்கிறது.

ரத்தம் கக்குதல் :

தாய்ப்பால் ஊட்டி முடித்த பிறகு சில குழந்தைகள் துப்பும் எச்சிலில் ரத்தம் கலந்திருக்கும். உங்கள் மார்புக் காம்புகளில் புண் இருப்பதன் காரணமாக அல்லது குழந்தையின் உணவுக் குழாயில் ஏற்பட்டுள்ள புண் காரணமாக இதுபோன்று நிகழக் கூடும்.

ஆரஞ்சு சருமம் :

மருத்துவ ரீதியாக இந்த பிரச்சனைக்கு கரோடெனீமியா என்று பெயர். கரோடின் சத்து மிகுந்த கேரட் போன்ற உணவுகளை குழந்தைகள் அதிகம் உட்கொள்வதன் காரணமாக இதுபோல நிகழக் கூடும்.

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்? : வளரும் குழந்தைகளுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக சின்ன, சின்ன பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானது தான். அவை தாமாகவே குணமாகிவிடும். அவை நீடித்திருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

CHELLA

Next Post

திருப்பதி கோயில் காணிக்கையை திருடிய ஒப்பந்த தொழிலாளர் அதிரடி கைது…..!

Mon May 1 , 2023
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம் நகை முதலிய பொருட்கள் கோவிலுக்கு வெளியே இருக்கின்ற கட்டிடத்தில் எண்ணப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிப்பதற்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. உண்டியல் காணிக்கையை என்னும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் தன்னார்வலர்கள் வங்கி அதிகாரிகள் ஒப்பந்த ஊழியர்கள் என்று பலரும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில், நேற்று காலை காணிக்கை பணத்தை என்னும் பணி […]
tiruppathi

You May Like