சொத்து வரி செலுத்திட்டீங்களா..? தாமதமானால் என்ன நடக்கும் தெரியுமா..? சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

சொத்து வரி தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சலுகை ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது. சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக ஒரு சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.

அரையாண்டு துவங்கும் முதல் 30 நாட்களில், சொத்துவரி செலுத்துவோருக்கு, வரியில் 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. பிறகு செலுத்தப்படும் சொத்துவரிக்கு 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்படும். கடந்த 2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் இலக்கை தாண்டி ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி வசூலிக்கும் பணிகளை, தேர்தல் பணிகளுக்கு நடுவே மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1 முதல் 20ஆம் தேதி வரை ரூ.190 கோடி வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர் வரியை செலுத்தி 5 சதவீத தள்ளுபடியையும் பெற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் சொத்துவரி நிலுவை இல்லாத சொத்து உரிமையாளர்களாக இருக்கின்றனர். எனவே, பொதுமக்கள் 5% தள்ளுபடியை பெற 30ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More : வரி செலுத்துபவரா நீங்கள்..? இதற்கெல்லாம் இனி வரியே தேவையில்லை..!! செம குட் நியூஸ்..!!

Chella

Next Post

33வது ஆண்டாக வருமான இலக்கை எட்டத் தவறும் இலங்கை - ஆய்வில் வெளியான தகவல்!

Mon Apr 22 , 2024
தொடர்ச்சியாக 33வது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமான இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட 2024 வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை ஆண்டுதோறும் வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு, பொருளாதாரத் தகவல்களுக்கான இலங்கையின் முதன்மை தளமாக உள்ள PublicFinance.lk இல் வெளியிடப்படுகிறது.   இலங்கையின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதி, பணம் மற்றும் […]

You May Like