fbpx

கவனம்.. நீங்கள் இஞ்சி டீ குடிப்பவரா..? இந்த உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்…

இஞ்சி ஒரு பயனுள்ள உணவுப்பொருள் ஆகும்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிரம்பிய, மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் மேம்படுத்துகிறது. இஞ்சி அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரானது மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான உயிரியல் சேர்மங்களைக் கொண்டுள்ளது. தினமும் பல்வேறு வடிவங்களில் இஞ்சியை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன..

அந்த வகையில் இஞ்சி டீ பிடிக்காது என்று சொல்பவர்கள் மிகமிக குறைவு… குறிப்பாக குளிர்காலத்தில் இஞ்சி டீயை விரும்பி சாப்பிடும் பலர் உள்ளனர்.. ஆனால் இஞ்சி டீயை அதிகமாக உட்கொள்வது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?எனவே நீங்கள் இஞ்சி டீயை விரும்புகிறீர்கள் என்றால், அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் ஒரு நாள் முழுவதும் ஐந்து கிராம் இஞ்சியை உட்கொள்ளலாம். ஆனால் இதை விட அதிகமாக இஞ்சி எடுத்துக் கொண்டால் அது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

இஞ்சியை அதிகமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இது தவிர வயிறு சம்மந்தமான பிரச்சனைகளூம் ஏற்படலாம்… இஞ்சியை அதிகமாக உட்கொள்வதால் தூக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்துடன் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுவதுடன், வயிற்றில் அதிக வாயுவை அது உருவாக்குகிறது.

மறுபுறம், உயர் இரத்த அழுத்தம் புகார்கள் உள்ளவர்கள், இஞ்சியை சரியான அளவில் எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். ஆனால், இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், இஞ்சியை சிறிதளவு எடுத்துக் கொண்டாலும், அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.. அவர்களின் இரத்த அழுத்தம் மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது..

இஞ்சியை அதிகமாக உட்கொள்ளும் போது, அது இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் குறிப்பாக அதை புறக்கணிக்க வேண்டும். அவர்கள் இஞ்சியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை திடீரென குறைக்கும். இது அவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்…

ஆனால் வெறும் சுவைக்காக இஞ்சியை அதிகம் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இஞ்சியில் ஆன்டி பிளேட்லெட்டுகள் உள்ளன. இஞ்சியின் இந்த பண்புகள் இரத்தப்போக்கை ஏற்படுத்தும். இது தவிர, கருப்பு மிளகு, கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களுடன் இஞ்சியையும் பலர் சாப்பிடுகிறார்கள்.

அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆபத்து இன்னும் அதிகரிக்கிறது. அதிக இஞ்சியை உட்கொள்வது உங்கள் குடலையும் பாதிக்கும். இது வயிற்றுப்போக்குக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. இஞ்சியை உட்கொள்வதால் இரைப்பை குடல் நோய்களும் ஏற்படலாம். இஞ்சியை அளவோடு உட்கொண்டால், அது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொண்டால், அது செரிமான அமைப்பைக் கெடுக்கும். இதனை உட்கொள்வதால் வயிறு தொடர்பான பல வகையான நோய்களும் ஏற்படும்.

Maha

Next Post

அடுத்த ஷாக்.. பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் உயர்வு... நாளை முதல் அமல்...

Fri Sep 30 , 2022
சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என, அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது.. பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகைகளை கொண்டாட திட்டமிடுவார்கள்.. இதனால் நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே […]

You May Like