கண்களின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது கறிவேப்பிலை என்று கூறலாம். கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு.
கருவேப்பிலையில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் என்பது நிறைந்திருக்கிறது. மேலும் அதிக அளவில் இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது. தினந்தோறும் 10 கறிவேப்பிலை இலையினை தொடர்ந்து எடுத்து கொண்டால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
அதிகமாக அனைவரும் கவலை படும் முடியின் வளர்ச்சிக்கும் இது பெரிதளவில் உதவுகிறது. தினமும் இதனை உணவில் சேர்த்து வருவதால் முடி கொட்டுதல், நரைமுடி, முடி உடைதல் ஆகிய பிரச்சினையில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்தும் அதிகமாக நிறைந்துள்ளதால், குடல் ஆரோக்கியத்திற்கு மற்றும் செரிமான ஆரோக்கியம் இருப்பதால் நார்ச்சத்து மிக மிக முக்கியமாக இருக்கிறது.