குங்குமப்பூவானது சிறந்த சூரிய எதிர்ப்பு முகவராக செயல்படும் தன்மை கொண்டது. மேலும் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தினை பாதுகாக்கவும் இது உதவுகிறது. இதனால் தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் குங்கும பூவினை எடுத்து கொள்வார்கள். அத்துடன் இதில் நிறைந்துள்ள பல அரிய மருத்துவ குணங்களை பார்க்கலாம் வாங்க.
உடலில் இருக்கும் புள்ளிகளை மங்கச் செய்து, உடலின் நிறத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை பிரகாசமாக்குகிறது. குங்குமப்பூ போர், முகப்பரு, பிரேக் அவுட்களில் உள்ள வலுவான பாக்டீரியா எதிர்ப்புகளையும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
தோலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி மற்றும் வடுக்களை அகற்றி அதனை குணப்படுத்தி புதிய சருமத்தை கொடுக்கிறது. குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்து வர இன்ஸோமினியா போன்ற பிரச்சினைகள் சரி செய்து நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது.
உபயோகிக்கும் முறைகள்: 2-3 குங்குமப் பூக்களை எடுத்து கொண்டு அதனை சூடான பாலில் கலந்து 5 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலந்து தூங்குவதற்கு முன்பாக இந்த பாலினை பருக வேண்டும்.