சிலருக்கு இரட்டை சுழி இருக்கும். இப்படி இரட்டை சுழி இருந்தால், பலர் பல விதமான கதைகளை கூறுவது உண்டு. குறிப்பாக, அதிகமாக சேட்டை செய்வார்கள், இரண்டு திருமணம் நடக்கும், என்று சொல்வதை எல்லாம் கேள்விப்ப்டிருப்பீர்கள். ஆனால் இதற்க்கு பின் அறிவியல் காரணங்கள் எதுவும் உள்ளதா என்று நீங்கள் யோசித்தது உண்டா? இது உண்மையா இல்லையா? இதற்க்கு பின் அறிவியல் காரணங்கள் எதுவும் உள்ளதா என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடந்து படியுங்கள்..
சில குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்து இரட்டை சுழிகள் இருக்கும். ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு, அவர்கள் வளர்ந்தவுடன் அந்த சுழிகள் மாறிவிடும். NHGRI ஆய்வுகளின் அடிப்படையில் உலக மக்கள் தொகையில் 5% மக்களுக்கு மாத்திரமே இரட்டை சுழி இருக்கின்றது. எல்லோருக்கு இவ்வாறு இரட்டை சுழி இருப்பதில்லை. அறிவியலின் அடிப்படையில், மரபணு தான் ஒருவருக்கு இரட்டை சுழி இருக்க முக்கிய காரணமாக அமைகின்றது.
ஆம், நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி யாருக்காவது இரட்டை சுழி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இரட்டை சுழி இருப்பவர்கள் அதிக சேட்டை செய்வர்கள், அவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் என்பது எல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான். ஆனால் ஜோதிடம் அடிப்படையில், ஒருவருக்கு இரட்டை சுழி இருந்தால், ஒரு சின்ன விஷயத்தையும் அவர்கள் போராடி தான் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
Read more: சரக்கு அடித்தப் பின் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!! என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?