தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் , விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை , வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை , தஞ்சாவூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை , அரியலூர் , பெரம்பலூர் , திருச்சிராப்பள்ளி , மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 22 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில்மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.