Rain: கனமழை எதிரொலி… இரண்டு மாவட்டத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை…!

Rain School 2025

கனமழை காரணமாக காரைக்கால், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். மேலும் 22-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும் 19, 20 தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 21-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக காரைக்கால், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சருமத்தை பொலிவாக்க இரவில் என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?. தெரிஞ்சுக்கோங்க!

Tue Nov 18 , 2025
இரவில் சரியான பழங்களை சாப்பிடுவது உங்கள் சருமத்திற்கு இயற்கையான இரவு சீரம் போன்றது. தூக்கத்தின் போது, ​​உடல் பழுதுபார்க்கும் நிலைக்குச் செல்கிறது, இந்த நேரத்தில், சத்தான பழங்கள் சரும செல்களை உள்ளிருந்து ஊட்டமளித்து, அவற்றின் பளபளப்பை மேம்படுத்துகின்றன. இரவில் சில பழங்களை சாப்பிடுவது அடுத்த நாள் உங்கள் சருமத்தை குறிப்பிடத்தக்க அளவில் பிரகாசமாக மாற்றும். அவற்றின் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீரேற்றம் பண்புகள் புத்துணர்ச்சியூட்டுகின்றன, பிரகாசிக்கின்றன மற்றும் ஆரோக்கியமாகின்றன. எந்த […]
Fruits

You May Like