217 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்…..! குஜராத்தில் கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டு பிரஜை…..!

குஜராத் மாநிலத்திற்குள் கடல் மூலமாக போதை பொருள் கடத்தி வரப்படுவது தொடர்பாக நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.


அந்த விசாரணையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டம், பத்தரி தாலுகாவில் ஹெராயின் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, 31 கிலோ ஹெராயினை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 217 கோடி என்று கூறப்படுகிறது.

ஆகவே நைஜீரிய நாட்டு பிரஜையை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி வரையில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Next Post

திருத்தணி அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அதிரடி கைது….!

Sat May 13 , 2023
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் இருந்து வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த இவருடைய கணவர் முரளி தரன். இவர், ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை இவர் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் சொல்லப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த 1ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருங்குளம் கிராம […]
மாடல் அழகியை தனது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி..!! விடிய விடிய சுற்றித்திரிந்த கார்..!! மீண்டும் அதிர்ச்சி

You May Like