உச்சக்கட்ட அலர்ட்..!! டெல்லியை மிரட்டும் பன்றிக்காய்ச்சல்..!! 2,000-ஐ நெருங்கும் பாதிப்பு..!!

Swine Flu 2026

டெல்லியில் பருவமழை காலத்தை தொடர்ந்து, ‘எச்.1என்.1’ (H1N1) எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்புப் பருவத்தில் தொற்றுப் பரவல் 6 மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.


டெல்லி மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, அண்மையில் ஒரே நாளில் மட்டும் 159 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதில், 114 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், டெல்லியில் நடப்பாண்டில் பதிவான ஒட்டுமொத்த பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கை 1,777 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தலைநகரில் பரிசோதிக்கப்படும் தினசரி காய்ச்சல் பாதிப்புகளில் சுமார் 72 சதவீத தொற்றுகளுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸே முக்கிய காரணமாக அமைந்திருப்பது பொது சுகாதாரத்துறை மருத்துவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரில் நிலவும் இந்த அபாயகரமான சூழலை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங் மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), ஆக்சிஜன் இருப்பு மற்றும் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளுக்குப் பற்றாக்குறை இல்லாத வகையில் தயார் நிலையைப் பராமரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறைகள் கூட்டாக எச்சரித்துள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கைகளைத் தொடர்ந்து சோப்பு திரவம் கொண்டு கழுவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சளி, கடுமையான காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளை அணுகி முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read More : மதுபானங்களில் கலப்படமா..? குவாலிட்டியில் கைவைக்கும் தமிழ்நாடு அரசு..! அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

Next Post

செல்லப்பிராணியுடன் ஒரே படுக்கையில் தூங்குகிறீர்களா? அப்போ கண்டிப்பா இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

Sun Aug 23 , 2026
செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் பலரும் அவற்றை குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே கருதுகின்றனர். குறிப்பாக நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடுவது மனதுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும். இதனால் பலர் இரவு நேரங்களில் தங்களுடன் ஒரே படுக்கையில் செல்லப்பிராணிகளை தூங்க வைக்கின்றனர். ஆனால் அன்பு மற்றும் பாசம் ஒருபுறம் இருந்தாலும், செல்லப்பிராணியுடன் ஒரே படுக்கையில் தூங்குவது சுகாதார ரீதியாக சரியானதா என்ற கேள்வியும் எழுகிறது. செல்லப்பிராணியுடன் நெருக்கமாக இருப்பது மன […]
dog on bed 56f3efd53df78ce5f8416e46 1

You May Like