நாட்டில் தற்போது பல மாநிலங்களில் பனிபொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாகடெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. குளிர் காலத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இதுவே ஆகும். காற்றின் தரமும் மிகவும் மோசமான நிலையிலையே உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரம் வரை கடும் குளிர் நிலவும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர் காரணமாக ஏற்கனவே டெல்லியில் உள்ள கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஜனவரி 15வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 14ல் சிறப்பு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதே சிறப்பு வகுப்புகளின் குறிக்கோள்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 15, வரை விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நேற்று(ஜனவரி 8) டெல்லி அரசு பிறப்பித்துள்ளது. டெல்லியில் நிலவும் கடும் குளிர் காரணமாக, டெல்லியின் அனைத்து தனியார் பள்ளிகளும் ஜனவரி 15 வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.