உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் அன்சல் பிளாசா பகுதியில் ஒரு உணவகம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மூன்று நண்பர்கள் அங்கு வந்து சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தனர்.
பிரியாணி கொண்டு வர தாமதம் ஆனது. இதனால், அந்த மூன்று பேரில் ஒருவர் ஆத்திரமடைந்து இங்கிருந்த உணவக ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் உணவக ஊழியருக்கு காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தினால் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து சம்பந்தப்பட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு கொண்டு வர தாமதமான காரணத்தால் ஹோட்டல் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மது போதையில் இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.