ரூ.250 கோடியில் பிரம்மாண்ட பங்களா..!! மகளுக்கு பரிசளிக்கும் ரன்பீர் – அலியா தம்பதி..!!

பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக இருக்க வேண்டும் என தங்களது மகள் ராஹா பெயரில் நடிகர் ரன்பீர் – அலியா தம்பதி ரூ.250 கோடி ரூபாயில் சொத்து வாங்க இருக்கிறார்களாம். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திருமணமான நடிகர்கள் ரன்பீர் – அலியா தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளது. தந்தை ரன்பீர் போலவே இருக்கும் ராஹாவின் க்யூட்டான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்குவார்கள். ஒரு வயது நெருங்க இருக்கும் ராஹாவை பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறது ரன்பீர்- அலியா தம்பதி.

அதாவது மும்பை பாந்த்ரா பகுதியில் ரன்பீர்- அலியா ஐந்து தளங்கள் கொண்ட பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வருகின்றனர். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் பணிகளை சென்று மேற்பார்வையிட்டனர். இந்த வீட்டின் பணிகளை முழுதாக முடிக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் எடுக்கும் என்கிறார்கள். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் கிட்டத்த ரூ. 250 கோடி இருக்குமாம். இந்த வீட்டை தங்கள் மகள் ராஹா பெயரில் பதிவு செய்ய இருக்கிறார்கள் ரன்பீர்- அலியா. இதன் மூலம் பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக ராஹா இருப்பார். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Read More : Tasmac | டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு..? 2 மணி நேரம்..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

உயிரை பறித்த விபரீத விளையாட்டு... குடல் வெடித்து இளைஞர் பலி!

Fri Mar 29 , 2024
கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பரின் ஆசனவாயில் காற்றை செலுத்தியபோது, குடல் வெடித்து அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விளையாட்டுத்தனமாக செய்த சம்பவம் விபரீதமாக முடிந்தது குறித்து விரிவாக பார்ப்போம். பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி என்ற பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த நபர் யோகேஷ் என்றும் அவர் அங்கே உணவு டெலிவரி ஏஜெண்டாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. காற்று அதீத அழுதத்தில் உள்ளே உடலில் செலுத்தப்பட்டதாகவும் […]

You May Like