Breaking : பெரும் பரபரப்பு.. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை..

admk off bomb

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றிரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. மோப்ப நாய் உதவி உடன் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சோதனையின் முடிவில் இது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.


நேற்று மட்டும் சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.. சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் செண்டர், ஆபிசர் பயிற்சி மையம், நேரு உள்விளையாட்டரங்கம், பிஎஸ்என்எல் அலுவலகம், நடிகர் எஸ்.வீ.சேகர் வீடு என 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Read More : Flash : குட்நியூஸ்.. 2 நாட்களாக ஆட்டம் காட்டிய தங்கம் விலை இன்று குறைந்தது.. நகைப்பிரியர்கள் நிம்மதி!

RUPA

Next Post

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவுக்கு திமுக அரசு கட்டிய தரமற்ற பள்ளிக் கட்டடம்...! ஓ.பி.எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

Wed Sep 24 , 2025
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு தரமற்ற பள்ளிக் கட்டடங்களை தி.மு.க. அரசு கட்டியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் மாற்றுவது கல்வி என்பதன் அடிப்படையில், தரமான மற்றும் கட்டணமில்லாக் கல்வியை வழங்கியதோடு, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தினார் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இதன் காரணமாக, பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை […]
ops 2026

You May Like