உத்தரபிரதேச மாநில பகுதியில் அமன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அடிக்கடி போனில் பேசி கொண்டும், வெளியில் சென்று வருவதுமாகவும் இருந்துள்ளார். சில நாட்களிலே மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி அதனை பொருட்படுத்தவே இல்லை.
இந்த நிலையில் தனது மனைவியை ஒரு ஓட்டலில் கள்ளக்காதலனுடன் அமன் கையும் களவுமாக பிடித்துள்ளார். பிடிபட்ட நபர் உள்ளூர் தலைவர் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மனிவியையும் உள்ளூர் தலைவரையும் அமன் மற்றும் அவரது நண்பர்கள் நடு ரோட்டில் வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரின் மீதும் அபன் காவல்துறையில் புகாரை அளித்துள்ளார்.
இதனையடுத்து மனைவி இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்து, அவர் கூறியதாவது நான் எனது சொந்த விருப்பத்தில் இந்த ஓட்டலுக்கு வரவில்லை என்றும், எனது கணவர் தான் என்னை இங்கே அழைத்து வந்து உள்ளூர் தலைவரிடம் அனுப்பி இன்று வழக்கை முடிக்கச் சொன்னார். மேலும், நான் அங்கு சென்றதும், எனது கணவர் அவர்களின் நண்பர்களுடன் வந்து எங்களை அடித்து உதைத்தனர் என்று கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.