கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் விவாகரத்துகள், வன்முறைகள் பெருகி கொண்டிருக்கின்றன. திருமணமான ஆண்கள், பெண்கள், உலகமறியாத பச்சிளம் குழந்தைகள் என பல உயிர்கள், இந்த கள்ளக்காதல் சம்பவங்களுக்காக காவு வாங்கப்படுகின்றன. ஏற்கனவே இதுகுறித்த கலக்கங்களும், வருத்தங்களும் நிலவும் சூழலில், சமீபத்தில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவரை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் ஓய்வதற்குள் திருமணம் ஆன 36 நாட்களில், 22 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவரை கோழிக்குழம்பில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜார்க்கண்ட் மாநில கர்வா மாவட்டம், விசுன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சுனிதா, சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புத்நாத் என்பவரை கடந்த மே 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். பெண்ணிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில், பெற்றோர் கட்டாயத்தின் பேரில் இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 14ஆம் தேதி தனது கணவருடன் அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்ற சுனிதா, தனது மாடி வீட்டு தோட்டத்துக்காக பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி வருமாறு கூறியிருக்கிறார். மனைவியின் பேச்சைக் கேட்டு கணவரும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அவரிடம் கொடுத்திருக்கிறார். அன்றைய தினம் இரவு கணவருக்கு கோழிக்கறி எடுத்து குழம்பு வைத்து சாப்பாடு பொட்ட சுனிதா, குழம்பில் விஷம் கலந்து கொடுத்திருந்தார்.
இதனை சாப்பிட்ட புத்நாத் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமானார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் சுனிதாவின் கிராமத்தினரோ சுனிதாவுக்கு ஏற்கனவே ஒரு இளைஞருடன் தொடர்பு இருந்தது என்றும் அவருடன் வாழ்வதற்கே சுனிதா அவருடைய கணவரை கொலை செய்தது தெரியவந்தது.