குஜராத் மாநிலம், காந்திநகரில் பார்த்த் – ரித்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வசித்து வரும் அதே பகுதியில், 20 வயதான ஹர்திக் என்ற கல்லூரி மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், ரித்தி குளிப்பதை பல நாட்களாக ஹர்திக் வீடியோ எடுத்து வந்துள்ளார். இது குறித்து ரித்திக்கு முதலில் தெரியாமல் இருந்துள்ளது. ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு, ஹர்திக் அந்த வீடியோவை ரித்தியிடம் காண்பித்துள்ளார்.
மேலும், நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரித்தி இதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹர்திக், நீ என்னுடன் உல்லாசமாக இருக்காவிட்டால் நீ குளிக்கும் வீடியோவை சமூகவளைதலத்தில் பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பதறிப்போன ரித்தி, கணவரிடம் நடந்ததை எல்லாம் கூறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பார்த்த், இளைஞரை கொலை செய்ய தனது மனைவியுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். அதன் படி, சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஹர்திக்கை தங்களின் வீட்டிற்க்கு வர வைத்துள்ளனர். அங்கு இதுதொடர்பாக ஹர்திக்கை கண்டித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி ஹர்திக்கின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின் இளைஞரின் செல்போனில் இருந்த வீடியோவை அழித்துள்ளனர். இதனிடையே, இளைஞரின் கொலை குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இளைஞரின் செல்போனும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தம்பதிகளின் 3 குழந்தைகளும் ரித்தியின் தந்தை வீட்டில் ஒப்ப்படைக்கபட்டனர்.
Also Read: மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை… தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?



