BREAKING| பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவனின் கையெழுத்து அவசியம் இல்லை..!! – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

chennai high court

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


ஒரு பெண் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, அவளது கணவனின் கையெழுத்தோ, அனுமதியோ அவசியம் என்பதை நிர்வாக அதிகாரிகள் வற்புறுத்துவது, சட்டரீதியாக தவறு மட்டுமல்ல, சமூகநீதி மீதான புறக்கணிப்பும் கூட. இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சிறந்த முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர் வழங்க உத்தரவிடக் கோரி ரேவதி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கணவனின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுகிறது என நீதிமன்றம் குறிப்பிட்டது.

பாஸ்போர்ட் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட அடையாள ஆவணம் எனக் கூறிய நீதிபதி இந்திய பாஸ்போர்ட் சட்டம் எங்கேயும் கணவனின் கையெழுத்து அவசியம் எனக் கூறவில்லை. ஆனால், சில அதிகாரிகள் பழமையான நடைமுறையை மேற்கொண்டு பெண்களை ஆண்களின் கீழ் வாழும் நபர்களாகவே சித்தரிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது என்றார். மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க பாஸ்போர்ட் மண்டல அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more: அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தும்..!! – வானிலை ஆய்வு மையம்

Next Post

274 பேரை காவு வாங்கிய விமான விபத்து.. திடீரென ஏற்பட்ட மின் தடை தான் காரணமா? வெளியான புதிய தகவல்..

Fri Jun 20 , 2025
A sudden power outage may have been the cause of the Ahmedabad plane crash that killed 274 people, new information has emerged.
FotoJet 2025 06 13T131136.770 1

You May Like